February 22, 2026, 4:08 PM
30.4 C
Chennai

பிழை இல்லாத வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

TN-assembly சென்னை: வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் அங்கீகரிப்புத் திட்டம் என்ற அந்தத் திட்டம் 3-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். மேலும் அந்தத் திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்பப் படிவங்களை கொடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஜூலை வரை ஒவ்வொரு மாதமும் ஒரு முகாம் நடத்தப்படும். அப்போது, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், அதை நீக்குவதற்காக 7-ம் எண் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் 8-ம் எண் படிவத்தை அளிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து மாற்றவேண்டும் என்றால் அதையும் கொடுக்கவேண்டும். இவற்றோடு, தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு வசதியாக, தங்கள் ஆதார் எண், தனது அல்லது குடும்பத்தினரின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை அனைத்து வாக்காளர்களும் அந்த முகாம்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆதார் எண் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் மாற்றம் செய்யப்படும். இந்த புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அரசியல் கட்சிகளின் உதவியையும் இந்திய தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனையையும் கேட்பதற்கு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி, இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி, இன்று பகல் 12 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகள் கலந்து கொள்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories