பிழை இல்லாத வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

TN-assembly சென்னை: வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் அங்கீகரிப்புத் திட்டம் என்ற அந்தத் திட்டம் 3-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். மேலும் அந்தத் திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்பப் படிவங்களை கொடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஜூலை வரை ஒவ்வொரு மாதமும் ஒரு முகாம் நடத்தப்படும். அப்போது, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், அதை நீக்குவதற்காக 7-ம் எண் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் 8-ம் எண் படிவத்தை அளிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து மாற்றவேண்டும் என்றால் அதையும் கொடுக்கவேண்டும். இவற்றோடு, தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு வசதியாக, தங்கள் ஆதார் எண், தனது அல்லது குடும்பத்தினரின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை அனைத்து வாக்காளர்களும் அந்த முகாம்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆதார் எண் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் மாற்றம் செய்யப்படும். இந்த புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அரசியல் கட்சிகளின் உதவியையும் இந்திய தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனையையும் கேட்பதற்கு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி, இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி, இன்று பகல் 12 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகள் கலந்து கொள்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories