சென்னை: தனது பிறந்த நாள் விழாவில் திரண்ட ரூ.24 லட்சத்தை திமுக அறக்கட்டளைக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியதாக திமுக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பில், கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாள் விழாவில் உண்டியல் மூலமும் திரண்ட ரூ. 24,10,095/- நிதியினை தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வழங்கினார். கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாளினையொட்டி கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திலும் – ஒய்.எம்.சி.ஏ. திடலிலும் நேரில் சயதித்து வாழ்த்துக் கூறிய கழக முன்னணியினர், கழகத் தோழர்கள் மற்றும் இளைஞர் அணியினர், நிதியாக ரூபாய் நோட்டிலான மாலை, கிரீடம், வாள், கேடயம், பொன்னாடை, செங்கோல்,பூச்செண்டு அணிவித்த வகையில், உண்டியல் மூலம் வரப்பெற்ற நிதி ரூ. 24,10,095/-(ரூபாய் இருபத்திநான்கு இலட்சத்து பத்தாயிரத்து தொண்ணூற்று ஐயது மட்டும்). மேற்கண்ட நிதியினை கழகப் பொருளாளர் ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வழங்கினார். – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறந்த நாள் விழாவில் திரண்டது ரூ.24 லட்சம்: அறக்கட்டளைக்கு வழங்கினார் ஸ்டாலின்
Published:

