பலாத்காரத்தின்போது அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது: குற்றவாளி முகேஷ் சிங்

delhi-student-nirbhaya புது தில்லி: நாட்டையே உலுக்கிய தில்லி துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அந்தப் பெண் பலாத்காரத்தின் போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்று ஆணவத்துடன் கூறியுள்ளார் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங். இந்த நிகழ்வை மையப் படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப் படத்துக்காக அவர் கூறிய வார்த்தைகள் இவை. மேலும், பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் தவறான நடத்தையே காரணம் என அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது தற்போது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அந்த ஆவணப் படத்தில் அவர் கூறியிருப்பவை…. ஓர் ஒழுக்கமான பெண் இரவு 9 மணிக்கு மேல் வெளியே சுற்றக் கூடாது. பாலியல் பலாத்காரத்துக்கு அதிக பொறுப்புடையவர்கள் பெண்கள்தான். வீட்டுப் பணிகளைச் செய்வது தான் பெண்களின் கடமை. பார்களுக்கும் டிஸ்கோத்தேக்களுக்கும் செல்வது அவர்களின் செயல் அல்ல… பாலியல் பலாத்காரக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பது பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இனி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்கள் அந்தப் பெண்களை உயிரோடு விடமாட்டார்கள். முன்பெல்லாம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று எண்ணி அந்தப் பெண்களை அதில் ஈடுபடும் ஆண்கள் விட்டுவிடுவார்கள். ஆனால் இனி அது நடக்காது” என்று முகேஷ் சிங் அந்த ஆவணப் படத்தில் கருத்து கூறியுள்ளார். முகேஷ் சிங்கின் இந்தக் கருத்து, பல்வேறு தரப்பினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரச் சம்பவத்தை மையப் படுத்தி, லெஸ்லீ அட்வின் என்பவர் தயாரித்து இயக்கிய ‘ India’s Daughter – இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்தில் முகேஷ் சிங் இவ்வாறு கூறியுள்ளார். இப்படி ஓர் ஆவணப் படத்தை தான் இயக்கியதற்கான காரணத்தை விளக்கிய லெஸ்லீ அட்வின், இந்தியாவில் பெண்ணுரிமைக்காக நடந்த போராட்டம் தன்னை பிரமிக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பெண் இறந்து போன நேரத்தில், இந்தியாவில் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், லத்தி தாக்குதலையும் பொருட்படுத்தாமல் பெண்களின் உரிமைக்காக ஆயிரக் கணக்கானோர் தேசிய அளவில் நடத்திய போராட்டத்தை நினைவுகூர்ந்த அவர், பெண்கள் உரிமைக்காக இந்தியாவைப் போல வேறு எந்த நாடும் எழுந்து நின்றதாகத் தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார். லெஸ்லீ அட்வின் தயாரித்துள்ள இந்த ஆவணப் படம் சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8ஆம் தேதி பிரிட்டனில் தொலைக்காட்சியில் வெளியிடப் படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories