முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்டத்தை ரத்து செய்யும் அசாம் அரசு!

hemant biswas of assam - 2026

நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. இது பொது சிவில் சட்டத்தின் அமலாக்கத்தில் ஒரு படிநிலையாகக் கருதப்படுகிறது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வேலையில் பாஜக., ஈடுபட்டுள்ளது. அண்மைக் காலமாக மக்களிடம் மத்திய அரசு, இதுகருத்து கருத்து கேட்டுள்ள நிலையில், உத்தராகண்டில் ஏற்கெனவே இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அசாம் அரசும் இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு கூறியுள்ளது. நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்தார். இதுகுறித்துக் கூறிய அவர், “முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று பல்வேறு சூழல்களில் தெரிவித்துள்ளார்.

“மேலும், இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து ஆகியவை, அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது. மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறையும்.

“இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்து வந்த 94 பதிவர்களுக்கு சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்“.” என்றுகூறினார்.

இந்நிலையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு ரத்து குறித்த மசோதா விரைவில் அசாம் சட்டசபையில் தாக்கலாகும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories