கோல்கத்தா இன்று இந்தியாவின் 66-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, இன்று நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடந்து. இந்த அணிவகுப்பில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் வாகனம் அல்லது நடனம் இடம்பெற்றது. ஆனால், தமிழகம், மேற்குவங்கம், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களின் சார்பிலான வாகனங்களோ நடனங்களோ இடம்பெறவில்லை. இந்நிலையில், இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்க கலாச்சாரத்தையும், திட்டத்தையும் விளக்கும் வாகனங்கள் அணி வகுப்பில் இடம் பெறாதது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், அமிதாப்புக்கு பத்மவிபூஷண் விருது வழங்கினால் போதாது, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றார்.

