மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் விவகாரம்: சர்ச்சையிலிருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

RSS Shakha மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் இந்திரா காந்தியால் சேர்க்கப்பட்ட மத சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் தற்போது குடியரசு தினத்தை ஒட்டி வெளியான அரசியலமைப்புச் சட்ட முகவுரை குறித்த விளம்பரத்தில் விடுபட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் எம்.பி., சஞ்சத் ராவுத் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது… “இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து தகுதியானதாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி விவாதத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், சரியான நோக்கத்துடனும் ஆழந்த விவரங்களோடும் ஈடுபடுகிறார்களா என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்கும் போது, இந்த சூழ்நிலையில் எதுவும் பேசாமல் இருப்பதுதான் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார். சிவசேனா எம்பி., சஞ்சய் ராவுத் இது குறித்துக் கூறிய போது, “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு கிடையாது. பாகிஸ்தான் இஸ்லாம் நாடு என்று இருக்கும்போது, இந்தியா ஹிந்து நாடாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூறும் ஹிந்து ராஷ்டிரத்தை ஒட்டி வந்தாலும், சிவசேனாவின் இந்த வார்த்தைக் கட்டுமானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. தாங்கள் கூறும் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கொள்கை சிவசேனாவின் கருத்தில் இருந்து வேறுபட்டது என்று கூறுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கூறியபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை புகுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் ஆர்.எஸ்.எஸ் இதையே வலியுறுத்தி வருகிறது. அனைத்து மதங்களின் பாலும் இந்திய சமூகத்துக்கு ஒரு சகிப்புத் தன்மை இருந்து வருகிறது. சிவசேனா என்ன கூறுகிறதோ அது மிகவும் தீவிரமாக விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல. எனவே அதனை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார். இந்நிலையில், மோடி அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையில் சிவசேனா ஈடுபட்டுள்ளதாகவே கருத இடமிருப்பதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்தக் கருத்தானது, நரேந்திர மோடி அரசுக்கு உள்ள கவுரவத்தை இந்த விவாதமானது குலைத்து விடும் என்று தெரிவிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், அரசின் விளக்கத்தை ஆர்.எஸ்.எஸ். மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories