ரூ600 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் முன்னாள் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல் என்ற செல்போன் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். கடந்த 2006-ம் ஆண்டு மத்தியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியது. மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூபாய் 3,500 கோடி முதலீடு செய்தது. இது, மத்தியப் பொருளாதார விவகாரங்களின் அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெறாமல் அனுமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.



