உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி

Published:

edappadi pazanisamy - 2026

சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம் விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வுக்காக எர்ணாகுளம் அழைத்துச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்ட செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.

கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு, கேரள அரசின் தலைமைச் செயலாளர் வாயிலாக எர்ணாகுளம் ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணசாமியின்உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றினை எர்ணாகுளத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

மேலும், எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் மனைவி மற்றும் மகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img