போதை மருந்து பயன்படுத்தியதால் கால்பந்து கேப்டனுக்கு 14 மாதங்கள் விளையாட தடை

Published:

20 May29 foot ball - 2026போதை மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெரு கால்பந்து அணியின் கேப்டன் பாவ்லோ குரேரோவுக்கு 14 மாதங்கள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதாகும் குரேரோ பெரு அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டீனாவுக்கு எதிராக பெரு விளையாடியது. அந்தப் போட்டியின்போது, தடை செய்யப்பட்ட போதை மருந்தை எடுத்துக் கொண்டதாக குரேரோ மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இவருக்கு ‘ வாடா’ எனப்படும் உலக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, 14 மாதங்கள் தடை விதித்தது. இந்த நிலையில், பிபா இந்த தடையை 6 மாதங்களாக குறைத்தது.

வாடா தொடர்ந்த வழக்கை விசாரித்த, சிஏஎஸ் எனப்படும் விளையாட்டு மேல்முறையீட்டு கோர்ட், வாடா அளித்த 14 மாத தடையை உறுதி செய்தது. அதனால், இந்த உலகக் கோப்பையில், பெரு அணிக்காக விளையாடும் வாய்ப்பை இவர் இழந்துள்ளார். பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்குகிறது. இதில் சி பிரிவில் பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பெருவும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பிபா உலகக் கோப்பையில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1982க்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் பெரு அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குரேரோ இருந்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img