இன்று கூடுகிறது கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு

madras high court - 2026

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கான கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு இன்றும், நாளையும் கூட உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறைக் காலமாக அறிவிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி, ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோரும் மே 9 மற்றும் மே 10-ஆம் தேதிகளில் நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு, எஸ்.எம்.சுப்ரமணியம், எஸ்.ராமதிலகம், ஆர்.பொங்கியப்பன் ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.

மே 16 மற்றும் மே 17-ஆம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம். தண்டபாணி, சி.வி.கார்த்திகேயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோரும் மே 21 மற்றும் மே 24-ஆம் தேதிகளில் நீதிபதிகள் டி.ரவீந்திரன், பி.வேல்முருகன், வி.பவானி சுப்பராயன், பி.ராஜமாணிக்கம், ஆர்.ஹேமலதா ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மே 3-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.எம்.பஷீர்அகமது, ஆர்.தாரணி ஆகியோரும், மே 9 மற்றும் மே 10-ஆம் தேதிகளில் நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோரும், மே 16 மற்றும் மே 17-ஆம் தேதிகளில் நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர். மே 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுரேஷ்குமார், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.

கடைசி அமர்வு…கோடை விடுமுறைக்கால கடைசி சிறப்பு அமர்வுக்கான நீதிபதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பாஸ்கரன், ஆர்.எம்.டி. டீக்காராமன், என்.சதீஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதே போன்று உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நீதிபதிகள் எம்.வி.முரளிதரன் மற்றும் டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் அவசரமாகத் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

முக்கிய வழக்குகள்

இந்த கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. குறிப்பாக பி.இ. படிப்புக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் இடம் கோரி தொடர்ந்த வழக்குகள் குறிப்பிடத்தக்கவை.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories