சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் சிங்கம்புணரி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம். இங்கு கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கால யாகபூஜை தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு ஷீரடி சாயிபாபா சிலை பிரதிஷ்டை செயய்ப்பட்டு பூர்ணாகுதி நடை பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.


