காலா திரைப்படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Published:

19 June13 Kaala - 2026காலா படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க தடை கோரி தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,காலா திரைப்படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில நேரங்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்றும், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது. ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ரஜினி பேசிய பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் கோபத்தை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு உருவாகியது, அப்படியிருந்தும் காலா படத்தின் மூலம் தனுஷிற்கு 60 கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img