கின்னஸ் யோகா நிகழ்ச்சி இன்று தொடக்கம்

04 June19 yoga - 2026புதுச்சேரியில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர கின்னஸ் யோகா சாதனை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து மஹா மகரிஷி அறக்கட்டளை நிர்வாகி தயாநிதி வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரத்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும், மஹாயோகம் என்ற அமைப்பின் சார்பில் யோகம், தியானம் மூலம் தமிழகம் முழுவதும் ஆன்மிக அறிவு பரப்பப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு யோகாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தன்று 21 பேர், 37 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து லிம்கா சாதனை படைத்தனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு 46 மகளிர், 57 மணி நேரங்கள் தொடர்ச்சியாக யோகா செய்து கின்னஸ் சாதனைப் படைத்தனர். 2017-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள், இந்தியா புக் ரெக்கார்டு மூலம் யோகா சாதனை செய்தனர். 2017-ஆம் ஆண்டு 36 பேர், 57 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து, கின்னஸ் சாதனை படைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நிகழாண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் 121 மகளிர் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 7 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்த கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியை, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைக்கிறார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கமலக்கண்ணன், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதன் நிறைவு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories