ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்: கிரிக்கெட் போர்டிடம் விளக்கம் அளிக்கிறார் உமர் அக்மல்

20 June26 Umar Akmal - 2026கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதில் அடிலெய்ட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் மீண்டும் பாகிஸ்தானுடன் ஜூன் 16-ம் தேதி மோத உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நேற்று டி.வி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார்.

“கடந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் இரண்டு பந்துகளை விளையாடாமல் விடுவதற்கு சூதாட்டத் தரகர்கள் எனக்கு சுமார் 1.35 கோடி ரூபாய் தருவதாக கூறினர். அது, இந்தியாவுடனான உலகக்கோப்பை போட்டி. அந்தப் போட்டியில் களமிறங்காமல் இருக்கவும் என்னிடம் கேட்டனர். ஆனால், பாகிஸ்தானுக்காக விளையாடுவதில் உறுதியாக உள்ளேன். இதுபோன்று மீண்டும் என்னை அணுக வேண்டாம் என மறுத்து விட்டேன். உலகக்கோப்பை தொடர் என்றில்லாமல், இந்தியாவுடன் நடக்கும் அனைத்துப் போட்டிகளுக்கும் இது போன்ற அழைப்புகள் வரும்” என்றார் உமர் அக்மல்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

உமர் அக்மலின் இந்தப் பேச்சு உலகக்கோப்பை தொடர்களில் நடைபெறும் சூதாட்டத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. உமர் அக்மலின் இந்தத் தொலைக்காட்சி பேட்டிக்குப் பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்புப் பிரிவு முன்னர் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உமர் அக்மல் சூதாட்டத் தரகர்கள் தொடர்புகொண்டது குறித்து முன்னரே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் தெரிவிக்காதது தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உமர் அக்மலின் இந்தக் கருத்து கிரிக்கெட் உலகில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories