December 5, 2025, 8:12 PM
26.7 C
Chennai

பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

10 July05 COUNSELLING - 2025பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை இன்று தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கு விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களில் தகுதிபெற்ற 1,04,453 பேருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த முறை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன் -லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில், கட்டணம் ஏதுமின்றி கலந்தாய்வில் பங்கேற்கலாம். எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 10 -ஆம் தேதி நிறைவடைந்த பின்னர், பி.இ. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை முன்கூட்டியே இன்று தொடங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் அல்லாமல், ஏற்கெனவே உள்ள நடைமுறையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவிக்கையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவர்களுக்கென 6,000-த்துக்கும் அதிமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் 200 -க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் நாளான நாளை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுநாள், விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இவர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories