காச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Published:

17 July20 Vijaya baskar Minister - 2026சென்னையை அடுத்துள்ள சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவினை நவீனப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற பிரதமர் மற்றும் முதலமைச்சரின் எண்ணத்தை நிவர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த 3 மாதங்களில் 1000 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், மாதம் 500 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

Related articles

Recent articles

spot_img