சொந்த செலவில் சாலையை சீர்செய்த காவல் துறை அதிகாரிகள்

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகருக்குள் வரும் வாகனங்கள் பழுதில்லாமல் வர,சொந்த செலவில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர்.

கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் அனைத்து புறநகர் பஸ்களும் கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாகத்தான் வர வேண்டும்.

அண்ணா நூற்றாண்டு நினைவு வாயில் வழியாக தான் பெங்களூர், சேலம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நகருக்குள் செல்ல முடியும்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, கடந்த சில ஆண்டுகளாக பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளித்தது. பழுதாகிய சீர்செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடமும் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

தொடர் மழையால் இந்த சாலை மேலும் பழுதாகி, வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுழைவு வாயில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

அத்துடன் வாகனங்களில் அமர்ந்து பயணிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் தான் பயணம் செய்தனர். காரணம் இந்த நுழைவு வாயில் மீது வாகனம் மோதினால் அது கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

இந்த நுழைவு வாயில் வழியாக செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி, பலர் காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சாலை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர் செல்வமணி, ஏட்டுகள் நவீத்பாஷா, அருள்பிரகாஷ், வடிவேலு மற்றும் பூங்காவனம் ஆகியோர் தங்களது சொந்த செலவில், நுரம்பு மண்ணை வாங்கி, சாலையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த மேடு, பள்ளங்களை காவல் துறை சீருடையுடன் அவர்களே சமன் செய்தனர். அரசில் காழ்ப்புணர்ச்சியால் சீர் செய்யப்படாத இந்த சாலையை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சீர் செய்த போக்குவரத்து போலீசாரை பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories