December 6, 2025, 2:28 AM
26 C
Chennai

சுசி கணேசனும் மனைவியும் போனில் அழைத்து ஆபாசமாக திட்டுகிறார்கள்: அமலா பால் சோகம்!

amalapaul susiganesan - 2025

மீடூ விவகாரம் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. ஆண்கள் குறித்து #மீடூ பேசப்பட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டியதாக சுசி கணேசன் மீது அமலாபால் இப்போது பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலையின் #மீடூ புகாருக்கு ஆதரவளிக்கும் வகையில், இயக்குநர் சுசி கணேசன் குறித்து டிவிட்டர் பதிவில் பகிர்ந்தார் நடிகை அமலா பால். அதைப் பார்த்துவிட்டு, தனது மனைவியுடன் சேர்ந்து அமலா பாலை ஆபாசமாக வசைபாடியுள்ளார் சுசிகணேசன். அதைக் கேட்டு அவர் மனைவி மஞ்சரி சிரித்துக் கொண்டிருந்தாராம்!

’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்த பாலியல் புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்தார். ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நடிக்கும் போது தானும் சில பாலியல் ரீதியிலான தொல்லைகளை சந்தித்ததாக அமலா பால் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான நிலையில், இயக்குநர் சுசி கணேசனும் அவரது மனைவியும் தன்னை போனில் அழைத்து ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தினர் என்று அமலா பால் ட்விட்டரில் அடுத்த 2 மணி நேர இடைவெளியில் பதிவிட்டுள்ளார்.

amalapaul3 - 2025

என் வாழ்வில் மிகவும் அதிர்ச்சியான தருணம். இயக்குனர் சுசியும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். நான் எடுத்துப் பேசி, என் தரப்பு விளக்கத்தை எடுத்துக் கூற முயன்றேன். அப்போது சுசியின் மனைவியை சமாதானப்படுத்த முயன்ற போது, சுசி கணேசன் என்னை ஆபாசமாகத் திட்டினார். அதைக் கேட்டுக் கொண்டு அவரது மனைவி சிரித்துக் கொண்டிருந்தார். இருவரும் என்னை அவமானப்படுத்த என்னை மிரட்டினர் என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.

சுசி கணேசன் மீது #மீடூ புகார் தெரிவித்த லீனா மணிமேகலைக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஒரு ரூபாய் மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார் சுசி. இந்நிலையில் சுசி கணேசனுக்கு எதிராக நடிகை அமலா பால் புகார் கூறியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஒரு நடிகையை இயக்குனர் ஒருவர் இவ்வாறு அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி அச்சுறுத்துவது என்பது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories