திருடன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு! மனிதாபிமானமற்ற கொடூரம்!

NorthIndian guy attacked by locals - 2026

சிதம்பரம்: சிதம்பரத்தில் திருடன் என நினைத்து பொதுமக்களால் தாக்கப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் காசுகடைத் தெருவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக சுற்றி வந்தார். மேலும், ஒவ்வொரு வீட்டின் முன் நிற்பதும், பின்னர் செல்வதுமாக இருந்த அந்த நபர், திடீரென அந்த தெருவில் நின்றிருந்த ஒரு காரின் கதவை பிடித்து இழுத்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் கார் உரிமையாளரிடம் கூறினர்.

ஆத்திரமடைந்த அவர், வடமாநில இளைஞரைத் தாக்கினார். அந்த நபர் இந்தியில் பேசியது புரியாத நிலையில், அங்கே கூடிய பொதுமக்களும் சரமாரியாகத் தாக்கினர். கட்டி வைத்தும் உதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி., பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த இளைஞர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், அவரை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Topics

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Entertainment News

Popular Categories