December 6, 2025, 8:45 PM
26.8 C
Chennai

செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

1500728669 - 2025

சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாங்கள் விலகியதாக பொய்யான தகவலை பரப்பி அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர் என குற்றம்சாட்டினார் …

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சேலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காக நேற்று மாலை சேலத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சேலம் ஏவிஆர் ரவுண்டானாவில் அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார், அப்போது முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் நீங்களும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக சில நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் அமமுகவிலிருந்து நாங்கள் விலகுவதாக இதுவரை நாங்கள் யாரும் தெரிவிக்கவில்லை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியை பொறுக்காத அதிமுகவினர் அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவே இப்பேர்ப்பட்ட பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தார்.

மேலும் செந்தில் பாலாஜியும் நானும் அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஆதலால் என்றும் சின்னம்மா வழியில் அமமுகவில் நீடிப்போம் எனவும் தெரிவித்தார்.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதித்ததே இல்லை. ஆனால் அம்மா வழியில் செயல்படுவதாகவும் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும் கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக கர்நாடகாவில் புதிய அணையை கட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதையே அவர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த எடப்பாடி அரசு முன்வராது அப்படி வந்தால் அவர்கள் தோற்று விடுவார்கள் அனைத்து தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்பது அவர்களுக்கே தெரியும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories