திருவாரூருக்கு தேறுதலே தேவை; மீட்டெடுப்பே தேவை: ‘தமிழ்’இசை சௌந்தர்ராஜன்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

tamilisai soundarrajan - 2026
File copy

திருவாரூருக்கு தேர்தல் தேவையில்லை; தேறுதலே தேவை! வாக்கெடுப்பு தேவையில்லை; மீட்டெடுப்பே தேவை! என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வரவேற்று தனது டிவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்…

திருவாரூர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது! புயலுக்குப் பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரணப் பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன்… திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல, அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை ஓட்டெடுப்பு அல்ல, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி,.. என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று பாஜக., அலுவலகத்தில் நடைபெற்ற உயர் நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப் பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img