இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிப்ரால்டரில் நடந்து வரும் நான்காவது மாஸ்டர்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் கிரிகோரி ஒப்ரின் (Grigoriy Oparin) இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இந்த வகையிலான போட்டி யில் 23 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்த 2-வது ஆட்டம் இதுவாகும். ஆனந்த் தனது முதல் சுற்றில் ஹங் கேரி வீராங்கனை வஜ்டா எதிர் கொண்டார். இந்த ஆட்டமும் டிராவில் முடிவ டைந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஆறு சுற்றுக்குள் உள்ள நிலையில் ஆனந்த் மற்றும் நாகமுரா இருவரும் 14-வது இடத்தில் உள்ளனர்.

