சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷியா புனித தளம் ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 45 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 110 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பில் முதல் சம்பவம் கார் குண்டு வெடித்ததில் ஏற்பட்டது. மற்ற இரண்டு சம்பவங்களும் தற்கொலை குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்தவை என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

