யோகா குரு ராம்தேவ்வின் பதஞ்சலி ஆயுர்வேத மையத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், உத்தரகாண்ட் அரசு சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் சுரேந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு கடந்த ஆண்டே கொண்டு செல்லப்பட்டு விட்டது. பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து இது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

