கெய்ல் நிறுவன வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சீராய்வு மனுவில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார். பின்னர், கெயில் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

