அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்து வரும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் மிதிவண்டி பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கவுகாத்தியில் நடக்கும் போட்டியில் 30 கிலோ மீட்டர் பிரிவில் விஜயலட்சுமி தங்க பதக்கம் பெற்றார். சோபாதேவி வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தானின் சபியா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

