December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

நடிகை தற்கொலையில் தொடர்புடைய காதலன் கைது

naga jhansi suicide - 2025

கடந்த வாரம் ஹைதராபாத் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய 21 வயதே ஆன ஜான்ஸி என்ற சின்னத்திரை நடிகையின் தற்கொலைச் சம்பவத்தில் அவரது காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜான்சி, தன் எலரெட்டி குட்டா அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கு போட்டி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணத்தை அவர் குறிப்பிடாததால் அவரது ஐபோன் மற்றும் சாம்சங் போன் ஆகியவற்றை போலீஸார் சோதித்து வருகின்றனர். அவரது ஐபோன் லாக்கை எடுக்க முடியாததால் அவரது சாம்சங் போனை சோதித்தனர். அதில், சூர்யா என்ற இளைனஞருடன் ஜான்ஸி அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.

ஜான்ஸியின் போன் கால் ஹிஸ்ட்ரியில் சூர்யாவின் எண்ணைக் கண்டறிந்து போலீஸார் சூரியாவிடம் விசாரணையை மேற்கொண்டனர்.  அப்போது  சூர்யா கூறுகையில், ‘எனக்கு ஜான்ஸியை 10 மாதங்களாகத்தான் பழக்கம். இருவரும் காதலித்தோம். என் தங்கை திருமணம் முடிந்ததும் எங்கள் காதல் குறித்து என் வீட்டில் பேச இருந்தேன். ஜான்ஸியை என் தோழி என என் தாயாரிடம் அறிமுகப்படுத்தினேன். அப்போது என் தாயார் எனக்கு பெண் பார்த்து வருவதாக ஜான்ஸியிடம் கூறினார். இதனால் ஜான்ஸி மனம் வருத்தம் அடைந்தார். கடந்த இரு நாட்களாக என் போன் காலுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர் நான் வேலையில் மும்முரமாக இருந்ததால் ஜான்ஸியின் அழைப்பை ஏற்க முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அவரை நான் ஏமாற்றவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆனால் ஜான்ஸியின் தாய் அன்னபுராவிடம் போலீஸார் விசாரித்தபோது, ஜான்ஸி தான் சம்பாதித்த பணத்தில் சூர்யாவுக்கு ரூ.1.3 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகவும் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பைக் கைவிட வேண்டும் என்று சூரியா வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த ஜான்ஸி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தான் நினைப்பதாக அவர் கூறினார். மேலும் ஜான்ஸி தங்க ஆபரணங்களை சூர்யாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால்  சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories