February 22, 2026, 11:50 AM
29.6 C
Chennai

நடிகை தற்கொலையில் தொடர்புடைய காதலன் கைது

naga jhansi suicide - 2026

கடந்த வாரம் ஹைதராபாத் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய 21 வயதே ஆன ஜான்ஸி என்ற சின்னத்திரை நடிகையின் தற்கொலைச் சம்பவத்தில் அவரது காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜான்சி, தன் எலரெட்டி குட்டா அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கு போட்டி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணத்தை அவர் குறிப்பிடாததால் அவரது ஐபோன் மற்றும் சாம்சங் போன் ஆகியவற்றை போலீஸார் சோதித்து வருகின்றனர். அவரது ஐபோன் லாக்கை எடுக்க முடியாததால் அவரது சாம்சங் போனை சோதித்தனர். அதில், சூர்யா என்ற இளைனஞருடன் ஜான்ஸி அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.

ஜான்ஸியின் போன் கால் ஹிஸ்ட்ரியில் சூர்யாவின் எண்ணைக் கண்டறிந்து போலீஸார் சூரியாவிடம் விசாரணையை மேற்கொண்டனர்.  அப்போது  சூர்யா கூறுகையில், ‘எனக்கு ஜான்ஸியை 10 மாதங்களாகத்தான் பழக்கம். இருவரும் காதலித்தோம். என் தங்கை திருமணம் முடிந்ததும் எங்கள் காதல் குறித்து என் வீட்டில் பேச இருந்தேன். ஜான்ஸியை என் தோழி என என் தாயாரிடம் அறிமுகப்படுத்தினேன். அப்போது என் தாயார் எனக்கு பெண் பார்த்து வருவதாக ஜான்ஸியிடம் கூறினார். இதனால் ஜான்ஸி மனம் வருத்தம் அடைந்தார். கடந்த இரு நாட்களாக என் போன் காலுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. பின்னர் நான் வேலையில் மும்முரமாக இருந்ததால் ஜான்ஸியின் அழைப்பை ஏற்க முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அவரை நான் ஏமாற்றவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆனால் ஜான்ஸியின் தாய் அன்னபுராவிடம் போலீஸார் விசாரித்தபோது, ஜான்ஸி தான் சம்பாதித்த பணத்தில் சூர்யாவுக்கு ரூ.1.3 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகவும் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பைக் கைவிட வேண்டும் என்று சூரியா வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த ஜான்ஸி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தான் நினைப்பதாக அவர் கூறினார். மேலும் ஜான்ஸி தங்க ஆபரணங்களை சூர்யாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால்  சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories