திருச்சியில் வரும் மார்ச் 20–ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நிதீஷ்குமார், லல்லு ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் ராகுல் காந்தியையும் மாநாட்டில் பங்கேற்க செய்வதில் திராவிடர் கழகம் ஆர்வமாக உள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று இளங்கோவனும் நேரில் அழைத்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் ஒரே மேடையில் அனைத்து தலைவர்களும் பங்கேற்பது தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் என்று கருதுகிறார்கள்.