மும்பை புனே சிறையில் இருந்து நடிகர் சஞ்சய்தத் விடுதலை

Published:

42 மாத சிறைவாசத்தை முடித்து வெளியே வந்தார் சஞ்சய்தத் – 5 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று, புனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இன்று காலை சிறையிலிருந்து விடுதலையானார். இயக்குனர் ஹிரானி மற்றும் சஞ்சய் தத் குடும்பத்தினர் சிறைக்கு சென்று சஞ்சய் தத்தை அழைத்து வந்தனர். பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத், பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்த போதும் ஏதும் பேசாமல், காரில் ஏறி விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.

Related articles

Recent articles

spot_img