பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

Published:

panpoli sundarraja perumal temple onam function - 2026


செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.

செங்கோட்டை அருகே பைம்பொழில் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத
ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

IMG 20241005 WA0082 - 2026

இந்தாண்டு அதேபோல் இன்று புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு பண்பொழி நாயுடு சமுதாயம் சார்பில் பூமிநீளா சமேத ஸ்ரீசுந்தராஜ பெருமாள் மற்று பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பண்பொழி அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் நாயுடு சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.

Related articles

Recent articles

spot_img