திருநாவுக்கரசரை தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ஸ்டாலின்!

Vijayakanth STalin - 2026தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது…  விஜயகாந்த உடல் நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். அரசியல் குறித்து பேசவரவில்லை என்று கூறினார்.

நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை,. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தானே களம் இறங்கி, நேரில் அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு தமிழகத்தை கூட்டணி பேரங்களால் தொற்றிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழக அரசியல் தலைவர்களும் பயங்கர சுறுசுறுப்பாக உள்ளனர். கூட்டணி பேரங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், தேமுதிக., இன்னமும் இழுபறியில் உள்ளதால், கூட்டணிப் பேச்சும், அதற்காகக் காத்திருந்து மற்றவர்களுக்கு ஒதுக்கும் இட ஒதுக்கீடும் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்னும் சேரவில்லை என்பதால், திமுக., சற்றே உஷார் அடைந்துள்ளது.

விஜயகாந்த் இன்னமும் சவ்வ்வாக இழுத்துக் கொண்டிருப்பதால், நேற்று திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்து, அரசியல் பரபரப்பு நிலவும் நேரத்தில் அரசியலைப் பேசாமல் என்ன வெட்டிக் கதை அளக்கவா வந்தேன் என்று மூஞ்சியில் அடித்தது போல் செய்தியாளர்களிடம் கேட்டுவிட்டுச் சென்றார்.

இதனிடையே, இன்று காலை ரஜினி வந்து சந்தித்தார். ஆனால், அவர் இதில் அரசியல் இல்லை, வெறுமனே வந்து உடல் நலம் விசாரித்தேன் என்றார் . ஆனால் அவரது பேச்சை எவரும் நம்பத் தயாரில்லை.

Vijayakanth stalin meet - 2026

இப்போதும் ஒரு அரசியல் தலைவரின் பேச்சை மக்கள் நம்பத் தயாரில்லை. அது மு.க.ஸ்டாலின். இன்று அவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரிடம் கேட்டபோது, அரசியல் எல்லாம் ஒன்றும் இல்லை, உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்தோம் என்றார்.

எனினும் தேமுதிகவை திமுக., முயன்று வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாமக., தான்வெளியே போயிற்று… விஜயகாந்த் ஆவது உள்ளே வரட்டும் என்று, ஸ்டாலின் நினைப்பதால், கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று முற்பகல் விஜயகாந்த் வீட்டுக்கு வந்தார் மு.க.ஸ்டாலின்! பின்னர், விஜயகாந்த்தை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தேமுதிக.,வின் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வரும் சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநாவுக்கரசருக்கு கொடுத்த அசைன்மெண்ட் தோற்று விட்டதால், தானே நேரடியாகக் களம் இறங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதனால்தான் விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசியுள்ளார் ஸ்டாலின். இது, கூட்டணிப் பேச்சாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்குமே எழுந்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories