காவல் ஆணையாளராக அலோக் குமார் வர்மா பதவி ஏற்பு !

Published:

 

புது தில்லி மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பி.எஸ்.பஸ்சி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய ஆணையாளராக அலோக் குமார் வர்மா நேற்று பதவியேற்றார். 1979-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், புது தில்லி திகார் சிறையின் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

புது தில்லியின் காவல்துறை தெற்கு மாவட்ட துணை ஆணையாளர், குற்றப்பிரிவு இணை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், அந்தமான் நிகோபார் தீவுகளில் ஐ.ஜி.யாகவும், புதுச்சேரியில் டி.ஜி.பி.யாகவும் பணியாற்றி உள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வரும் இந்த நேரத்தில் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள அலோக் குமார் வர்மா, இன்னும் 17 மாதங்களுக்கு இந்த பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img