மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத மோடி அரசு பட்ஜெட் : தி.வேல்முருகன்

Published:

 

தமிழகம் உள்ளிட்ட மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடியதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.:

உணவுப் பொருள் விற்பனையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு என்பது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மறைமுக செயலாகும்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை மனதில் கொண்டு விவசாயிகள், ஏழை மக்களுக்கான அரசு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என தி.வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img