December 6, 2025, 3:03 AM
24.9 C
Chennai

இன்று ஆ.ராசா.. நாளை கனிமொழி..! அண்ணன் அழகிரி இடத்தைப் பிடிக்க அதிரடி!

Rajakanni - 2025

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி முடிவு செய்திருக்கிறார். இதற்காக நாளை அவர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தென் மாவட்டங்களில் செல்வாக்கு உடையவராகத் திகழ்ந்த மு க அழகிரியை ஓரங்கட்டிவிட்டு அழகிரியின் செல்வாக்கை திமுக தட்டிப் பறிக்க முயற்சி செய்து வருகிறது!

தென் மாவட்டங்களில் அழகிரிக்கு என்று செல்வாக்கு இருந்தது! அதற்கு காரணம் சில சாதி சமுதாய வாக்குகள் என்று கூறப்படுவதுண்டு! இந்நிலையில் திமுகவில் இருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகி விட்டதால், தீவிர அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கி இருக்கிறார்.

அழகிரி இல்லாத நிலையில் அவருக்காக இருந்த வாக்குவங்கியை செல்வாக்கை திமுக தக்க வைப்பதற்காக சகோதரியான கனிமொழியை களத்தில் இறக்கியிருக்கிறது

இதில் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்! மதுரை மற்றும் தென் தமிழகத்தில் தேவர் சமுதாய வாக்கு வங்கியும் நாடார் சமுதாய வாக்கு வங்கியும் பெரிதாகக் கருதப்படுகிறது! இந்நிலையில் அழகிரியால் கிடைக்கவேண்டிய வாக்குகளைக் குறிவைத்து தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு படை இறங்கி இருக்கிறது

அதற்காக தென் தமிழகத்தில் அதிகம் தலைகாட்டுகிறார் கனிமொழி! இப்போது  அவரை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பெரிதும் முயன்று வருகிறார்கள் திமுகவினர்

கனிமொழி அண்மையில் வந்திருந்தபோது அனிதா ராதாகிருஷ்ணன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு அசால்டாக 2000 ரூபாய் 500 ரூபாய் தாளை ஆளுக்கு ஏற்ற மாதிரி இரண்டு மூன்று என்று கணக்காக எண்ணி கையில் திணிக்கிறார்! இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது!

இந்நிலையில், கனிமொழி நாளை நாடார் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க உள்ளார்.

திமுக.,வில் இப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக.,வில் பெரிய தலைவர்கள் எவரும் இதுவரை விருப்ப மனு அளிக்க வில்லை. ஆனால், முதல் நபராக இன்று ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட விருப்ப மனு  அளித்துள்ளார்.  இந்நிலையில் கனிமொழியும் நாளை தூத்துக்குடிக்காக விருப்ப மனு அளிக்க உள்ளதாகக் கூறப் படுகிறது.

கனிமொழிக்காக அள்ளிவிடும் அனிதா …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories