இன்று ஆ.ராசா.. நாளை கனிமொழி..! அண்ணன் அழகிரி இடத்தைப் பிடிக்க அதிரடி!

Rajakanni - 2026

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி முடிவு செய்திருக்கிறார். இதற்காக நாளை அவர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தென் மாவட்டங்களில் செல்வாக்கு உடையவராகத் திகழ்ந்த மு க அழகிரியை ஓரங்கட்டிவிட்டு அழகிரியின் செல்வாக்கை திமுக தட்டிப் பறிக்க முயற்சி செய்து வருகிறது!

தென் மாவட்டங்களில் அழகிரிக்கு என்று செல்வாக்கு இருந்தது! அதற்கு காரணம் சில சாதி சமுதாய வாக்குகள் என்று கூறப்படுவதுண்டு! இந்நிலையில் திமுகவில் இருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகி விட்டதால், தீவிர அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கி இருக்கிறார்.

அழகிரி இல்லாத நிலையில் அவருக்காக இருந்த வாக்குவங்கியை செல்வாக்கை திமுக தக்க வைப்பதற்காக சகோதரியான கனிமொழியை களத்தில் இறக்கியிருக்கிறது

இதில் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்! மதுரை மற்றும் தென் தமிழகத்தில் தேவர் சமுதாய வாக்கு வங்கியும் நாடார் சமுதாய வாக்கு வங்கியும் பெரிதாகக் கருதப்படுகிறது! இந்நிலையில் அழகிரியால் கிடைக்கவேண்டிய வாக்குகளைக் குறிவைத்து தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு படை இறங்கி இருக்கிறது

அதற்காக தென் தமிழகத்தில் அதிகம் தலைகாட்டுகிறார் கனிமொழி! இப்போது  அவரை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பெரிதும் முயன்று வருகிறார்கள் திமுகவினர்

கனிமொழி அண்மையில் வந்திருந்தபோது அனிதா ராதாகிருஷ்ணன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு அசால்டாக 2000 ரூபாய் 500 ரூபாய் தாளை ஆளுக்கு ஏற்ற மாதிரி இரண்டு மூன்று என்று கணக்காக எண்ணி கையில் திணிக்கிறார்! இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது!

இந்நிலையில், கனிமொழி நாளை நாடார் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க உள்ளார்.

திமுக.,வில் இப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக.,வில் பெரிய தலைவர்கள் எவரும் இதுவரை விருப்ப மனு அளிக்க வில்லை. ஆனால், முதல் நபராக இன்று ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட விருப்ப மனு  அளித்துள்ளார்.  இந்நிலையில் கனிமொழியும் நாளை தூத்துக்குடிக்காக விருப்ப மனு அளிக்க உள்ளதாகக் கூறப் படுகிறது.

கனிமொழிக்காக அள்ளிவிடும் அனிதா …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories