சிவராத்திரியன்று எதற்காக இரவில் தூங்காமல் கண்விழிக்க வேண்டும்?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ டாகடர் சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சிவராத்திரியின் முக்கிய நியமங்களாக உபவாசமும் தூங்காமல் கண் விழிப்பதும் கூறப்பட்டுள்ளன. கண் விழித்தல் என்னும் விரதம் மகா சிவராத்திக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கும் கூறப்பட்டுள்ளது.

சில விரதங்களிலும் நோன்புகளிலும் தூங்காமல் கண் விழிக்கும் நியமம் உள்ளது. சில மந்திர தீட்சைகளிலும் சில உபாசனா சம்பிரதாயத்திலும் கண் விழித்திருக்கும் நியமம் விதித்துள்ளார்கள். இதனை “அகோ ராத்ரி” விரதமாக கடைபிடிப்பார்கள்.

இதன் முக்கிய உத்தேசம் என்னவென்றால் பகலும் இரவும் கூட விழிப்போடிருந்து பரமாத்மாவை பூஜிக்க வேண்டும் என்பதே.
உபவாசமிருந்தும் விழித்திருந்தும் இரவை சில காலங்களாகப் பிரித்து சிவனை ஆராதிப்பது வழக்கம். ஒரு நாளை நான்கு மணிகளுக்கு ஒரு பாகமாக ஆறு பாகங்களாகக் கொண்டு ஷட்கால சிவ பூஜை செய்வதைப் பார்க்கிறோம். அதனால் அர்த்த ராத்திரி நள்ளிரவில் கூட சிவபூஜை செய்கிறோம்.
சிவ பூஜை செய்தும் அபிஷேகம் செய்தும் சிவ நாம ஜபம் செய்தும் பஜனை செய்தும் ஏதோ விதத்தில் நேரத்தை சிவமயமாகக் கழிக்க வேண்டும். சிவ பாவனையோடு சிவ க்ஷேத்திரங்களை தரிசிப்பதிலும் சிவாலயங்களில் இருப்பதுமாக சிவராத்திரி தினத்தைக் கழிக்க வேண்டுமென்று கூறப்படுகிறது.
சிவன் நித்திய ஜாக்ரதையில் இருப்பவர். அதாவது எப்போதும் விழித்திருப்பவர். பிரளய காலத்தில் பிரபஞ்சத்திற்கு ஓய்வளிக்கப்படுகிறது. பிரபஞ்சமனைத்தும் சோர்வடைகையில் ஓய்வளிப்பவர் பரமாத்மா. ஓய்வில் என்ன நிகழ்கிறது? மீண்டும் உயிர்த்தெழுவதற்குத் தேவையான சக்தியை அந்த ஓய்வு அளிக்கிறது. அதே போல் பிரளயத்தில் ஓய்வளித்து மீண்டும் சிருஷ்டிக்குத் தேவையான சக்தியை ஒன்று கூட்டி உலகிற்கு அளிப்பவன் பரமாத்மா. சிருஷ்டி ஸ்திதி லயத்திற்குக் காரணமான பரமாத்மாவான சதாசிவன் பிரளய கால ஓய்வை அருளுகிறார்.

பிரபஞ்சத்திற்கு ஓய்வு கொடுத்தலும் பரமாத்மா எப்போதும் விழித்திருப்பவர். சிவனுக்குத் தூக்கம் விழிப்பு என்பது கிடையாது. எப்போதும் விழிப்போடிருக்கும் ஞான சொரூபம். ஞானம் எப்போதும் விழித்திருக்கக் கூடியது. அப்படிப்பட்ட பரம சிவனைப் பூஜிக்கும் மகா சிவராத்திரியன்று அவருக்கு மிகவும் பிடித்தமான விழித்திருக்கும் செயலை நாமும் மேற்கொள்கிறோம். இதன் மூலம் நம் பாவங்கள் தொலைகின்றன.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

இதனை தத்துவ ரீதியாக கவனித்தால் ஆழமான பொருள் கிடைக்கிறது. இரவெல்லாம் விழித்திருப்பது என்னும் கூற்றுக்கு தியான நிலையில் ஒருமித்த மனதோடு இருத்தல் என்று பொருள்.

நித்திரை என்பது எதுவும் தெரியாத நிலை. விழிப்பு என்பது அனைத்தும் தெரியும் நிலை.

எதுவும் தெரியாத அஞ்ஞான நிலையில் இல்லாமல் முழுமையான ஞான நிலையில் இருப்பதற்காகச் செய்யும் சாதனையே சிவராத்திரி விரதம் என்பது தத்துவப் பொருள்.

பௌதீகமான பொருள் தூங்காமல் கண் விழித்து சிவ பூஜை, அபிஷேகம் போன்றவற்றைச் செய்வது என்பது. இதன் பலன் இதற்குண்டு. முதலில் பௌதீக பொருளை கிரகித்து அவற்றைக் கடைப்பிடித்து, பின்னர் சிறிது சிறிதாக யோக ரீதியாகப் புரிந்து கொண்டு அதையும் கடைபிடிக்கையில் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories