அன்புமணியின் மது ஒழிப்பு போராட்டம்: 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உறுதி

19-04-15 Karur pmk News photo 02 கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க கட்சியின்  மகளிரணி கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பா.ம.க கரூர் மாவட்ட பொருளாளர் பாக்கியலெட்சுமி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறியதாவது.,19-04-15 Karur pmk News photo 04 நமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே மதுவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. நாம் குடியை நிறுத்து, குடிப்பழக்கம் உயிரை கொல்லும் என வலியுறுத்தி பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினால் தமிழக அரசு நாளுக்கு நாள் குடியுங்கள், குடியுங்கள் என டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வருகிறது. இதனால் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அ.தி.மு.க அரசே தாலியை அறுக்கிறது. எனவே மதுவினால் மாண்டவர்கள் அதிகமானோர். ஆதலால் குடியை நிறுத்தவும், குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நமது கட்சி இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு செவிடன் காதில் ஊதும் சங்கு போல தான் உள்ளது. ஆனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலின் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மதுவிற்கு எதிரான பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார். எனவே கரூரில் வரும் மே மாதம் நடைபெற உள்ள மதுஒழிப்பு போராட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். 19-04-15 Karur pmk News photo 03ஆகவே இந்த அறப்போராட்டத்தில் பா.ம.க மகளிரணியினரை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மகளிரணியினரின் பலத்தை நிருபிக்க வேண்டும் என சூளுரை விடுத்தார். மேலும் இந்த அறப்போராட்டத்தை தொடர்ந்து மதுவை ஒழிக்க மகளிரணியினர் திண்ணை பிரச்சாரம் மூலம் ஈடுபட வேண்டும். மகளிரணியினர் தங்களது முழு போராட்டத்தை மதுவுக்கு எதிராக அற வழியில் பாடுபட்டு ஐயாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இக்கூட்டத்தில் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ந.மு.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் தாந்தோன்றி ராஜா, கடவூர் பழனிச்சாமி, க.பரமத்தி சந்திரன், அரவக்குறிச்சி ரமேஷ், கரூர் கிழக்கு முத்துசாமி, கரூர் மேற்கு மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் பூவேந்திரன், கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் வாங்கல் சதீஸ், சண்முகம், கண்ணன், அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான மகளிரணியினரும் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories