மே 14ல் சிறை நிரப்பும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

d-raja-cpiபுதுச்சேரி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வரும் மே மாதம் 14ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் ரயில் மறியலும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு குறித்த மறு ஆய்வுக் கூட்டம் புதுச்சேரியில் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது… மத்திய அரசு விவசாயி விரோதப் போக்குடன் செயல்படுகிறது. விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் உள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை நிரப்புதல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களையும் மே 14 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும். நிலம் கையகப் படுத்தும் சட்டம் மட்டுமல்லாது, வகுப்புவாதக் கொள்கையைப் புகுத்த முயற்சி செய்து வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் ஆர்எஸ்எஸ். விஎச்பி, சங் பரிவார் அமைப்புகள் தங்கள் வகுப்புவாதக் கொள்கைகளை தீவிரமாக பரப்ப முனைந்துள்ளன. மதவாத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த பா.ஜ.க. அரசு ஊக்குவிக்கிறது. எனவே, அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார் ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories