வேறு மாநிலத்தில் கைது செய்யும்போது போலீஸாருக்கான விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மனு

சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த எஸ்.தங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா போலீஸார் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி எனது சகோதரர் ரவியை கைது செய்தனர். மூன்று நாள்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து பிறகு, 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதேபோன்று முகமது ரபி என்பவரை தமிழகத்திலிருந்து கைது செய்து சென்ற ஆந்திர போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது, ஏராளமான பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஆந்திர போலீஸார் கைது செய்கின்றனர். மேலும், எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நினைத்தவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து, எத்தனை நபர்களை ஆந்திர போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய ஆந்திர போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும். வேறு மாநிலத்துக்குச் சென்று யாரையாவது கைது செய்யும்போது போலீஸார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதேபோன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், இந்த வழக்கை இங்கு நடத்துவதா அல்லது உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories