சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த எஸ்.தங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா போலீஸார் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி எனது சகோதரர் ரவியை கைது செய்தனர். மூன்று நாள்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து பிறகு, 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதேபோன்று முகமது ரபி என்பவரை தமிழகத்திலிருந்து கைது செய்து சென்ற ஆந்திர போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது, ஏராளமான பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஆந்திர போலீஸார் கைது செய்கின்றனர். மேலும், எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நினைத்தவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து, எத்தனை நபர்களை ஆந்திர போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய ஆந்திர போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும். வேறு மாநிலத்துக்குச் சென்று யாரையாவது கைது செய்யும்போது போலீஸார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதேபோன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், இந்த வழக்கை இங்கு நடத்துவதா அல்லது உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்
தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஆன்மிகச் செய்திகள்
ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!
அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.
கட்டுரைகள்
பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!
பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.
ஆன்மிகச் செய்திகள்
ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!
வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்
தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஆன்மிகச் செய்திகள்
ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!
அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.
கட்டுரைகள்
பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!
பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.
ஆன்மிகச் செய்திகள்
ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!
வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!
அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...
லைஃப் ஸ்டைல்
கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!
ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட!

