போக்குவரத்துக் கழக ஊழியர்க்கு ஊதிய உயர்வு தொடர்பாக இன்று இறுதி அறிவிப்பு

tnstcசென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை இன்று நடைபெற உள்ள 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் இறுதி முடிவை அறிவிக்கப் போவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடிவை போக்குவரத்துக் கழகத் தொழிற் சங்கங்கள் ஏற்றுக்கொண்டால், 6-ஆம் கட்டத்தோடு 12-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.10) போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், 50 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கைகளை தொழிற்சங்க பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தினர். அதில் ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதுதொடர்பாக அரசுடன் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு தொடர்பாக அடுத்த இரு தினங்களில் அரசுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் அரசின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சரும், அரசு அமைத்த 12-ஆவது ஊதிய ஒப்பந்தக் குழுவினரும் அறிவித்தனர். இந்நிலையில், ஊதிய ஒப்பந்தத்துக்கான 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. இதில் அறிவிக்கப்படும் அரசின் இறுதி முடிவை தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories