மரணத்தை வென்றவர்கள்!

yeman raja - 2026

மரணத்தை வென்றவர்கள்! : வேத புராணங்களில் மரணத்தை வென்றவர்கள் பற்றி நான்கு கதைகள் உள்ளன.

எல்லைக்குட்பட்ட ஆயுள் கொண்ட மார்க்கண்டேயன் தவத்தால் ஈஸ்வர அருளைப் பெற்று சிரஞ்சீவி ஆனார். தன் இறப்பைத்தானே வென்றார்.

சாவித்திரி கணவரின் மிருத்யுவை வென்றாள். இதில் ஈஸ்வர அருள் பற்றி கூறப்படவில்லை. எமனோடு போராடினாள். மூர்ச்சையடைந்த கணவனின் உயிரை அபகரிப்பதற்கு வந்த எமனை நேராகப் பார்த்தாள். வாதிட்டாள். வென்றாள்.

இதுவும் மார்க்கண்டேயர், நசிகேதன்… இவர்கள் இருவரை போலவே யம தரிசனம், வாக்குவாதம், வெற்றி இவற்றோடு கூடிய கதையே.

இத்தகைய யம தரிசனமும் சம்பாஷ ணையும் யோகம், அந்தரங்கம் இவற்றால் ஆன செயல்பாட்டின் ஒரு பாகமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மரண வாயிலில் இருந்த கணவனின் சூட்சும சரீரத்தைத் தொடர்ந்து சென்று கணவனின் மிருத்யுவை வென்று ஜீவனின் உயிரைத் திரும்ப உடலில் சேர்த்து, திரும்பி வந்த யோகினியாக சாவித்திரியைப் பார்க்க வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணர் குரு புதல்வனை பரலோகத்திலிருந்து வரவழைத்து அளித்தார். இங்கு யோக சாதனை விசேஷங்கள் கூறப்படவில்லை.
இறப்பு என்பது உலக இயல்பே ஆனாலும் அதனை வெல்வது சாத்தியம்தான் என்பது இதன் கருத்து.

நசிகேதன் தன் மரணத்தை எதிர்க்கவில்லை. ஸ்ரீராமனின் வனவாசம் போலவே, தந்தையின் ஆணையை ஏற்று நடந்தான். நசிகேதன் மூலம் மரணத்தை வெல்லும் மார்க்கத்தை உலகிற்கு உபதேசித்தார் எமதர்மராஜா. மிருத்யு தேவதையான யமனே மரண ரகசியத்தை நசிகேதனுக்கு போதித்ததால், மிருத்யுஞ்ஜய இயல்பு நசிகேதனுக்கு அனுபவம் ஆயிற்று.

மானுட உலகின் மீது அபாரமான கருணையோடு எமதர்மராஜன் இந்த போதனையை கேட்பவருக்கும், கூறுபவர்களுக்கும் கூட மிருத்யுஞ்ஜயத்துவம் சித்தியாகும் என்று வாக்குறுதி அளித்தது கடோபநிஷத் த்ருதீயவல்லியில் இறுதி இரண்டு மந்திரங்கள் மூலம் அறியமுடிகிறது.

விவேகமுள்ளவர்கள் விரும்பிப் பெறவேண்டியது மிருத்யுஞ்ஜய இயல்பையே!

– சத்குரு ஶ்ரீசிவானந்தமூர்த்தி அவர்கள் எழுதிய ‘கட யோகம்’ நூலிலிருந்து

தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories