December 6, 2025, 9:35 PM
25.6 C
Chennai

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேளாஹூளி!

Bolahooli - 2025

பேளாஹூளி
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, கத்தரி, முருங்கை – 2 கப்(நறுக்கிய துண்டுகள்)
உரித்த பச்சைப் பட்டாணி – கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்பொடி – கால் தேக்கரண்டி
நெய் – 1/8 கப்
எண்ணெய் – கால் கப்
வறுத்து அரைக்க:
பெருங்காயம் – ஒரு சிறுத் துண்டு
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
தனியா – 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 10 – 12
வெந்தயம் – கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – கால் கப்
பொடிசெய்ய:
ஏலக்காய் – 2
ஜாதிக்காய் – சிறு துண்டு
கிராம்பு – 2
பட்டை – சிறுத் துண்டு
தாளிக்க:
கடுகு – 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி
கறிவேப்பிலை

செய்முறை
அரிசியை தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைத்து குழைய வேக விடவும். துவரம் பருப்பையும் வேக விட்டுக் கொள்ளவும். காய்கறிகளை சிறு துண்டுகளாக்கி சிறிது உப்பும், மஞ்சள்பொடியும் சேர்த்து நசுங்கும் பதமாக வேக விட்டுக் கொள்ளவும்.

வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களுடன் பாதியளவு தேங்காய்த் துருவலை 3 தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். மீதமுள்ள தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி செய்யக் கொடுத்துள்ள மசாலா சாமான்களை எண்ணெயில்லாமல் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.

புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை குக்கரில் போட்டு நன்கு கிளறவும். அதில் கரைத்த புளியை விட்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்து புளி வாசனை போனதும், வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்து கெட்டியானதும், வறுத்து அரைத்த பொடியை சேர்க்கவும்.

அதன் பிறகு வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். மேலே வறுத்த தேங்காய், மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். நெய்யை காய வைத்து முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.

மணமான பேளாஹூளி அன்னம் பொரித்த அப்பளம், அவியல், உருளை ரோஸ்ட்டுடன் அருமையாக இருக்கும்.

இதில் விருப்பப்பட்டால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்கலாம். பூண்டு வதக்கி சாமான்களுடன் அரைத்து சேர்க்கலாம். கர்நாடகத்தின் மிக பிரபலமான சிறப்பான உணவு இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories