பூலித்தேவன் 303வது பிறந்த நாள் விழா! நெற்கட்டான்செவலில் உற்சாகம்!

Published:

ops pulidevan - 2026

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டாஞ்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 303வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நெற்கட்டாஞ்செவலில் உள்ள  பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதல்வருடன் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் O.S.மணியன், கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பாதுகாப்பு பணியில் நெல்லை சரக டிஐஜி கபில் குமார்
சாட்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து பெருமிதத்துடன் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ள பதிவு…

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img