நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டாஞ்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 303வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நெற்கட்டாஞ்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துணை முதல்வருடன் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் O.S.மணியன், கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பாதுகாப்பு பணியில் நெல்லை சரக டிஐஜி கபில் குமார்
சாட்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து பெருமிதத்துடன் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ள பதிவு…
விடுதலை போராட்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 303வது பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த நெற்கட்டும்செவல் கிராமத்தில், பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்கையில் பெருந்திரளான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. pic.twitter.com/DGmIXIHICk
— O Panneerselvam (@OfficeOfOPS) September 1, 2018