உ.வே.சாமிநாத ஐயர்… தமிழ்ப் பணி – ஒரு புரிதல்!

Published:

uvesa iyer - 2026

கீழே காணும் பத்து பாட்டு என்பவை தமிழகம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தது என்பதை பற்றிய குறிப்புகள் கொண்டது ..

இதை மீட்டு குடுத்தவர் உ வே சா அவர்கள் , சரி யாரோ வைத்து இருந்த பழைய சுவடியை வாங்கி வந்து பிரிண்ட் அடிச்சு குடுத்தார் என நான் பல காலம் நினைத்து இருந்தேன் !! (just a compiler) ஆனால் விசயம் அது இல்லை ..

இந்த பத்து பாட்டு என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொகுத்து அதற்க்கு நச்சினார்க்கினியர் என்பவர் உரை எழுதி 1870 களில் ஒரே ஒரு ஓலை சுவடி மட்டுமே கிடைக்கபெற்றது .. பாடல்கள் கிடைக்க வில்லை !!!

இந்த பத்து பாட்டில் திருமுருகாற்றுப்படை மட்டும் பலரிடம் சுவடி இருந்தது .. காரணம் அது பக்தி பாடல்கள் .

மீதம் இருக்கும் பாடல்களை தேடினார் .. அதில் சீவக சிந்தாமணி யில் மதுரை காஞ்சி பற்றிய குறிப்புகள் இருந்தன ஆனால் பாடல்கள் ???

“ரெண்டு பிரதிகள் பல பக்கங்கள் இல்லாமல் கிடைத்தன , அதை சிறிது ஒரு மொழியும் தொடர்மொழியுமாக அமைந்த மூல பதங்களை இணைத்து எனது சிற்றறிவிற்கு எட்டிய மட்டும் அடி வரையறை செய்து , உரை ஆசிரியர் இலக்கண உரைகளின் மேற்கோளாக சில பகுதிகள் இவற்றின் மூலங்களை இணைக்க பேரு உதவியாக இருந்தது “

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

இது ஒரு வகை “reverse engineering in literature” வெறும் உரையை கொண்டு … பல பிட் பிட்டாக இருந்த பாடல்களை உயிர் ஊட்டி இருக்கிறார் ..

இந்த பத்து பாட்டில் …

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஓணம் பண்டிகை கொண்டாப்பட்ட விசயம் “மதுரை காஞ்சியில் 590-600 வரிகளில் சொல்லப்பட்டு இருபது தெரிகிறது

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் 590

மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப்படு நெற்றி 595″

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கட் தேறல் மகிழ் சிறந்து திரிதரக், (590 – 599)

Meanings:

கணம் கொள் அவுணர்க் கடந்த – destroyed groups of Avunars, 
பொலந்தார் மாயோன் – Thirmal with gold garland, மேய ஓண நன்னாள் – the day of his birth,

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

கோணம் தின்ற – ruined by curved swords/goads, இது திருமாலின் சுதர்சன சக்கரம் – விஜி

வடு ஆழ் முகத்த – with faces with deep scars,

சாணம் தின்ற – scarred by weapons,

சமம் தாங்கு தடக்கை – big hands that bore battles,

மறம் கொள் சேரி – neighborhood/village/settlement of brave warriors,

மாறு பொரு செருவில் – in battle fought because of differences,

மாறாது – unchanging,

உற்ற வடுப்படு நெற்றி – forehead with scars,

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் – great warriors who desire war with strands of bee-buzzing flowers,

கடுங்களிறு ஓட்டலின் – since they rode/goaded the fierce elephants,

காணுநர் – spectators, 
இட்ட – laid down,

நெடுங்கரைக் காழகம் – dark colored long cloth boundaries,

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

நிலம் பரல் உறுப்ப – pebbles on the ground hurt,

கடுங்கட் தேறல் மகிழ் சிறந்து திரிதர – roamed happily after drinking strong liquor

இரண்டாயிரம் வருடம் முன்பாக தமிழ் .. இதன் உரையை படித்து அசந்து போனேன் ..

மஹா விஷ்ணுவை பற்றிய தமிழ் என்னை அசர வைத்து விட்டது .. ஒவ்வரு வரியும் மிரட்டுது !!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Related articles

Recent articles

spot_img