February 22, 2026, 7:36 AM
25.4 C
Chennai

இந்த சிலை அரசியலில் மட்டும் மாநில பேதம் இல்லை!

senkottai park - 2026

செங்கோட்டை முத்துசாமிப் பூங்காவில் உள்ள காந்தி சிலையின் அடியில் காணப்படும் கல்வெட்டு தகவல்.

சிலையைத் திறந்து வைத்தவர் பட்டம் ஏ.தாணு பிள்ளை. திருவாங்கூர் முதல்வராக 1954ல் இருந்த போது திறந்து வைத்துள்ளார். அப்போது இவர் பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி என்ற பிஎஸ்பி கட்சியில் இணைந்து அதன் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ்காரர் என்றாலும், அப்போதைய குழப்ப நிலையில் பிஎஸ்பி கட்சித் தலைவராகி காங்கிரசுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்து, முதல்வராகியுள்ளார். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில், கேரளத்தில் சக்தியுடன் திகழ்ந்த பிஎஸ்பி கட்சி கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இவர் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கம்யூனிஸ்ட் அரசு அங்கே ஏற்பட்ட (விமோசன சமரம்) விடுதலைப் போராட்டத்தில் அடிவாங்கியதில், மீண்டும் பிஎஸ்பி-காங்கிரஸ் கூட்டணி அரசில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் தாணு பிள்ளை. அந்த 60-62ல் கேரள மாநில முதல்வராக இருந்தவர் முதுபெரும் கம்யூனிஸ்ட்டான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

பட்டம் ஏ.தாணு பிள்ளை. 85 வயது வாழ்ந்தவர். காங்கிரஸ்காரர். திருவனந்தபுரம் பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், பட்டம் எனும் பேர் இவர் பேரோடு ஒட்டிக் கொண்டது.

திருவனந்தபுரத்தில் நாயர் குடும்பத்தில் 1885ல் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர், கேரள அரசியலில் பீஷ்மாசார்யா என்று பேரெடுத்தவர். 1948ல் திருவாங்கூர் பிரதமராக இருந்தவர். பின்னரும் பஞ்சாப், ஆந்திர ஆளுநராகவும் இருந்துள்ளார்.

1954-55ல் திருவாங்கூர்-கொச்சின் முதல்வராக இவர் இருந்தபோது திறந்துவைக்கப்பட்ட இந்த காந்தி சிலையைப் பார்த்ததும் அவரைப் பற்றிய நினைவுகள்… ஏதோ சொல்லத் தோன்றியது!
6.6.54 ல் திறக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், எல்லாத் தகவலும் இங்கிலீஷில் இருந்தாலும், சிற்பி செங்கோட்டை ஆ.மாணிக்கம் ஆச்சாரி பெயர் மட்டும் தமிழில் தலைகாட்டுகிறது.

குறிப்பாக, காந்தி ஸ்டேசு என்ற வட்ட வடிவ எழுத்தின் கீழே காணப்படும் கலப்பை, சக்கரம் சின்னம் – கல்வெட்டுகளில் கட்சிச் சின்னத்தை அழுத்தமாகப் பதியவைப்பதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அந்தக் காலத்திலேயே காட்டியுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்த அரசியலில் மட்டும் மாநில பேதங்கள் ஏதுமில்லை!

-செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories