சித்தாந்தச் சுமப்பாளர்… சீக்கிரமே கலந்துவிட்டார்!

venkatesh ramasamy - 2026

சங்கத்தின்(RSS) மீதான தடையை எதிர்த்து நடந்த சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு 1949ம் வருடம் சிறை சென்றவர்கள் காரைக்குடி ஹரிஹர ஷர்மா, மதுரையில் ஜனாஜி. இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனாஜியின் மிக நெருங்கிய நண்பர் வத்ராயிருப்பை பூர்விகமாகக் கொண்டு மதுரையில் வழக்கறிஞராக இருந்த ராமசாமிஜி. இவர் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். சங்க பிரச்சாரக் ஆகவும் இருந்தார்.பின்னர் ஜனசங்கம், பாஜகவில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தார்.

ராமசாமிஜிக்கு வெங்கடேஷ் என்று ஒரு மகன். 1953ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே ஷாகா சென்றவர். நம் பாஜக மாநில பொருளாளர் S R சேகருக்கு பள்ளிக்கூட, கல்லூரி காலங்களில் மிக நெருக்கமான நண்பர். ABVPல் மாநில பொறுப்புவரை வகித்தார்.

மதுரைக்கு குருஜி கோல்வல்கர் வந்தபோது அவரை கவனித்துக் கொள்ள(பிரபந்தக்) சங்கத்தால் பணிக்கப்பட்டார். சங்கத்தில் உள்ள பலருடன் மிக நெருங்கிப் பழகியவர்.

மதுரையில் இருந்து 1994வாக்கில் வெங்கடேஷ்ஜி தொழில் நிமித்தமாக சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். 1999ல் ராமசாமிஜியின் மறைவுக்குப் பின் மாம்பலம் வாசியானார் வெங்கடேஷ். Share broking செய்தார்.

2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது நான் மத்திய சென்னை, வட சென்னையில் பொது கூட்டங்கள் பேச செல்லும் போது என்னுடன் வருவார். சற்று கிண்டலுடன் கூடிய என் பேச்சை கேட்டுவிட்டு அதில் உள்ள நிறை குறைகளை சொல்வார். 5,6 கூட்டங்களுக்கு பின் நான் அவரையும் பொது கூட்டத்தில் பேச சொன்னேன். சற்று தயங்கினார். 2,3 கூட்டத்திற்குப் பின் எந்த தயக்கமும் இல்லாமல் பேசினார். அந்த தேர்தலுக்குப் பின் சென்னை மாநகர பாஜகவில் குறிப்பிடத்தக்க பேச்சாளர் ஆனார்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நவஜோத்சிங் சித்து, முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற தலைவர்கள் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது அவர்களுடன் தமிழகம் முழுவதும் accompany செய்து சென்றதுடன், பொது கூட்டத்தில் அவர்களுளக்கு மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார்.

தென் சென்னை மாவட்ட பொருளாளர், துணை தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தார்.

மதுரை அரசியலை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்து அலசி ஆராய்ந்து அதில் ஈடுபாட்டுடன் இருந்தார். மேயர் முத்து, V K குருசாமி, ஸ்தாபன காங்கிரஸ் என்று பல அனுபவங்களை எங்களுடன் பல்வேறு காலக்கட்டங்களில் சுவைபட சொல்வார். தான் பெற்ற அனுபவம், நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று பழைய சம்பவத்துடன் ஒப்பிட்டு சொல்வார்.

ஆங்கில சினிமா பார்ப்பதில், ஆங்கில நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிவாஜியின் நடிப்பிற்கு ரசிகன். MGRன் ஆளுமைக்கு ரசிகன். எல்லா வயதினருடனும் பேசக் கூடியவர். சங்க சித்தாந்தத்தில் மிக உறுதியான நம்பிக்கை, பற்று கொண்டவர்.

யாரிடமாவது சற்று முன் கோபம் கொண்டாலும் பின்னர் அவர்களை அழைத்து பேசும் குணம் கொண்டவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை நண்பர் ஜெயகிருஷ்ணன் விடியற்காலை 3.3/4 மணிக்கு அழைத்து massive Heart attackல் வெங்கடேஷ்ஜி இறந்து விட்டதாக சொன்னான்.

என்ன கொடுமை இது. சித்தாந்தத்தை நெஞ்சில் சுமந்து வாழும் எவரையும் நல்லவிதமாக வாழ இறைவன் விட்டு வைப்பததில்லை என்பதுதான் என்னுடைய கடந்து வந்த அனுபவம். வெங்கடேஷ் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளை சேர பிரார்த்திக்கிறேன்!

– ஓமாம்புலியூர் ஜெயராமன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories