சித்தாந்தச் சுமப்பாளர்… சீக்கிரமே கலந்துவிட்டார்!

venkatesh ramasamy - 2026

சங்கத்தின்(RSS) மீதான தடையை எதிர்த்து நடந்த சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு 1949ம் வருடம் சிறை சென்றவர்கள் காரைக்குடி ஹரிஹர ஷர்மா, மதுரையில் ஜனாஜி. இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனாஜியின் மிக நெருங்கிய நண்பர் வத்ராயிருப்பை பூர்விகமாகக் கொண்டு மதுரையில் வழக்கறிஞராக இருந்த ராமசாமிஜி. இவர் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். சங்க பிரச்சாரக் ஆகவும் இருந்தார்.பின்னர் ஜனசங்கம், பாஜகவில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தார்.

ராமசாமிஜிக்கு வெங்கடேஷ் என்று ஒரு மகன். 1953ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே ஷாகா சென்றவர். நம் பாஜக மாநில பொருளாளர் S R சேகருக்கு பள்ளிக்கூட, கல்லூரி காலங்களில் மிக நெருக்கமான நண்பர். ABVPல் மாநில பொறுப்புவரை வகித்தார்.

மதுரைக்கு குருஜி கோல்வல்கர் வந்தபோது அவரை கவனித்துக் கொள்ள(பிரபந்தக்) சங்கத்தால் பணிக்கப்பட்டார். சங்கத்தில் உள்ள பலருடன் மிக நெருங்கிப் பழகியவர்.

மதுரையில் இருந்து 1994வாக்கில் வெங்கடேஷ்ஜி தொழில் நிமித்தமாக சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். 1999ல் ராமசாமிஜியின் மறைவுக்குப் பின் மாம்பலம் வாசியானார் வெங்கடேஷ். Share broking செய்தார்.

2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது நான் மத்திய சென்னை, வட சென்னையில் பொது கூட்டங்கள் பேச செல்லும் போது என்னுடன் வருவார். சற்று கிண்டலுடன் கூடிய என் பேச்சை கேட்டுவிட்டு அதில் உள்ள நிறை குறைகளை சொல்வார். 5,6 கூட்டங்களுக்கு பின் நான் அவரையும் பொது கூட்டத்தில் பேச சொன்னேன். சற்று தயங்கினார். 2,3 கூட்டத்திற்குப் பின் எந்த தயக்கமும் இல்லாமல் பேசினார். அந்த தேர்தலுக்குப் பின் சென்னை மாநகர பாஜகவில் குறிப்பிடத்தக்க பேச்சாளர் ஆனார்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நவஜோத்சிங் சித்து, முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற தலைவர்கள் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது அவர்களுடன் தமிழகம் முழுவதும் accompany செய்து சென்றதுடன், பொது கூட்டத்தில் அவர்களுளக்கு மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார்.

தென் சென்னை மாவட்ட பொருளாளர், துணை தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தார்.

மதுரை அரசியலை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்து அலசி ஆராய்ந்து அதில் ஈடுபாட்டுடன் இருந்தார். மேயர் முத்து, V K குருசாமி, ஸ்தாபன காங்கிரஸ் என்று பல அனுபவங்களை எங்களுடன் பல்வேறு காலக்கட்டங்களில் சுவைபட சொல்வார். தான் பெற்ற அனுபவம், நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று பழைய சம்பவத்துடன் ஒப்பிட்டு சொல்வார்.

ஆங்கில சினிமா பார்ப்பதில், ஆங்கில நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிவாஜியின் நடிப்பிற்கு ரசிகன். MGRன் ஆளுமைக்கு ரசிகன். எல்லா வயதினருடனும் பேசக் கூடியவர். சங்க சித்தாந்தத்தில் மிக உறுதியான நம்பிக்கை, பற்று கொண்டவர்.

யாரிடமாவது சற்று முன் கோபம் கொண்டாலும் பின்னர் அவர்களை அழைத்து பேசும் குணம் கொண்டவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை நண்பர் ஜெயகிருஷ்ணன் விடியற்காலை 3.3/4 மணிக்கு அழைத்து massive Heart attackல் வெங்கடேஷ்ஜி இறந்து விட்டதாக சொன்னான்.

என்ன கொடுமை இது. சித்தாந்தத்தை நெஞ்சில் சுமந்து வாழும் எவரையும் நல்லவிதமாக வாழ இறைவன் விட்டு வைப்பததில்லை என்பதுதான் என்னுடைய கடந்து வந்த அனுபவம். வெங்கடேஷ் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளை சேர பிரார்த்திக்கிறேன்!

– ஓமாம்புலியூர் ஜெயராமன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories