முக்தி தரும் முகுந்தன்!

ranganagar
ranganagar

செல்லும் வழி எல்லாமே கண்ணன் முகமே
சொல்லும் மொழி எல்லாமே கண்ணன் பெயரே!
செய்யும் செயல் எல்லாமே கண்ணன் செயலே
உய்யும் வழி எல்லாமே கண்ணன் வழியே!(1)

ஆழ்வார்கள் வழி வந்த அடியவன் நானும்
தாழ்வாகக் கேட்பது முக்தி வரமன்றோ
பாபங்கள் செய்த பாமரன் நானோ
சாபங்கள் தொடராது சரண் புக வேணோ!(2)

பிறந்தப்பின் நீயே துணைனெ வந்தேன்
இறந்தபின் நீயே துணைவர வேண்டும்
இடைப்பட்ட காலம் இன்னல்கள் போக
அடைப்பட்ட கூட்டில் விடுபட வேண்டும்.(3)

சுழலும் சக்கரத்தைக் கொண்ட‌யென் ஸ்ரீனிவாசா
சுழலாது இருக்கச்செய் என் கர்மச்சக்கரத்தை
சுழலும் சூழ்நிலையில் நல்வினை அருளிடவே
சூழ்மலை ஏழு கொண்ட ஸ்ரீவெங்கடேசா!(4)

மாயைகள் சூழ்ந்து மறைக்கும் நேரம்
மாயோனே மாதவா விலக்கிடுவாயோ
அறியாமையில் நான் ஆழ்ந்திருந்தாலும்
அறிதுயிலமர்ந்தோன் வழியே தெளிந்திடவருட்செய்!(5)

நாசியில் நுழையும் திருத்துழாய் மனம்போல்‍ ‍பர‌
தேசியாம் என்னுள் நுழைந்தாய் லக்ஷ்மி பங்கா!
எங்கும் எதிலும் நீ இருப்பாய் இருப்பினும் என்னுள்
தங்கி நல்வழி நடத்தும் நாரணன் காண்பதெப்போது ?(6)

முடியாத வாழ்வும் முடியுமென்று ஒரு நாள்
முடியாது யானும் முயற்சிக்க முயல்கிறேன்
வேண்டாத பிறவி பல முறையெடுத்தும்
வேண்டும் மனதிற்கு வரும் துணை நீயே!(7)

பிணிச் சுவைத்தவுடலோ அழலலென்றாகும்
பணியென்றதுவரை பூதாத்மன் தாள் பனிவோம்
மணிவண்ணா நின் மார்பில் அலைமகள் போல‌
பிணைப்புடன் நிர்குணன் என் மார்பில் வேண்டும்!(8)

காரணமின்றி உன் செயல் இல்லை
காரணமின்றி என் பிறப்பில்லை
காரணம் தெரிந்தால் காரியமில்லை
காரியம் முடிந்தப்பின் என்னிருப்பில்லை.(9)

கடல் சூழ்ந்த மண்ணுலகம் போல கருங்
கடல்வண்ணன் சூழ்ந்த என்னுலகம் வாழ‌
அரண்னென்று அரியை அறிந்திடுவோர்க்கு
முரனில்லா வாழ்வும் முக்தியும் கிட்டும்!(10)

கம்பத்தடியான் (email: viruvasan@gmail.com)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories