ஆனை முகனைக் கேட்டேன்!

vinayaka chathurthi wishes - 2026
#image_title

–மீ.விசுவநாதன்–

ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் – அது
தானே தெரியும் என்றான் ! (1)

நாளில் ஒன்று பேசும் – என்
நாவைக் கட்டு என்றேன் !
தாளின் பற்று வைத்தால் – அது
தனியே போகும் என்றான் ! (2)

உன்னை எனக்குக் காட்டு-என்
உயிரே நீதான் என்றேன் !
என்னை உலகாய்ப் பார்க்க -குரு
இருபைத் தேடு என்றான் ! (3)

நீயே குருதா னென்று – மனம்
நெகிழ்ந்து வீழ்ந்து கேட்டேன் !
வாயை மூடிக் கொண்டு – என்
வாக்கில் அமர்ந்து கொண்டான் ! (4)


sankarar thirumoolar vinayakar - 2026

அன்னை தந்தையைப் போற்றும் – பண்பை
ஆனை முகனே விதைத்தான்
இன்பம் அடைந்திட வேண்டி – உடன்
ஈயும் குணத்தை அளித்தான்

உன்னுள் உலகமே என்னும் – ஞான
ஊற்றை உணரச் செய்தான்
என்னுள் மாயையை நீக்கி – ஒளி
ஏற்றி மகிழ்வைத் தந்தான்

ஐந்து கரத்தவ னான – “டுண்டி”
ஐயன் கணேச வள்ளல்
ஐந்து புலனுளும் உள்ளான் – இதில்
ஐயம் எதுவும் வேண்டாம்.

ஒன்றே அவனென எண்ணி – மனம்
ஓம்ஓம் எனவே ஓத
ஒன்றி அவனென ஆவோம்- தமிழ்
ஔவை ஞானம் கொள்வோம்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories