அவனும் இவனுமாய் …. இமயமும் பொதிகையுமாய்..!

Published:

courtallam falls police1 horz - 2026

வீரம் விளைந்த மண்
ஈரம் நிறைந்த மனம்!

அங்கே
போர்க் களத்தில் போராடும் ராணுவவீரன் போல்
இங்கே
நீர்க் களத்தில் நின்றாடும் காவலனின் நிதர்சனம்!

துப்பாக்கி ரவைகள் துளைத்தாலும்
துயர் மறந்து ஆயுதத்தை
தயக்கமின்றித் தாங்கியபடி
முன்னோக்கி நடைபோடும் கால்கள்
அவனது…!

அருவிநீர் அம்புகளாய்ப் பாய்ந்தாலும்
அதை சகித்து சிறுகழியை
சந்தோஷமாய் சுமந்தபடி
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கரங்கள்
இவனது…!

குண்டுகளின் சத்தத்தில் குவிந்திருக்கும்
அவன் நெஞ்சம்!
அருவிநீரின் இரைச்சலில் இணைந்திருக்கும்
இவன் இயக்கம்!

போராடும் களத்திலும் அவன்
இமயத்தின் இயற்கையை ரசிக்கிறான்…
நீராடும் அருவியிலும் இவன்
நிலைமையின் இருப்பை ரசிக்கிறான்…

பயங்கர வாதிகளின் பயங்கரத்தில் இருந்து
மண்ணையும் மக்களையும் காக்கும் அவனுக்கும்
திருட்டுக் கூட்டத்தின் முரட்டுத்தனத்தில் இருந்து
பயணியையும் தங்கத்தையும் காக்கும் இவனுக்கும்
வேறுபாடு ஏதும் உண்டோ?

– செங்கோட்டை ஸ்ரீராம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img