பங்குனி உத்திரம் – சிறப்புகள்!

nellaiappar sengol vizha - 2026
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது

பங்குனி உத்திரம் சிறப்புகள்

பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழா. இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களிலும் நாடெங்கிலும் பெருவாரியாக கொண்டாடப்படுகிறது. இந்த பங்குனி உத்திரம் திருநாள் புராணங்கள் மற்றும் சமயச் சடங்குகளுடன் இணைந்தது.

பங்குனி உத்திரம் – திருமணத்தின் நாள்

    இந்நாளில் தெய்வீக தம்பதியரான சிவன் – பார்வதி (காளத்தீஸ்வரர் கோவிலில்), முருகன் – தெய்வானை (பழனி, திருச்செங்கோடு போன்ற முருகன் கோவில்களில்), ராமர் – சீதை (ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில்) ஆகியோரின் திருமணம் கொண்டாடப்படுகிறது. இது “தெய்வீக திருமணங்களின் நாள்” என்றும் அழைக்கப்படுகிறது.

    உத்திர நட்சத்திரத்தின் சிறப்பு

    உத்திர நட்சத்திரம் வெற்றி மற்றும் மங்களகரமான முடிவுகள் தருவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் உத்திர நட்சத்திரத்திலும் இருக்கும் ஒரு அரிய நேரம்.

    ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

    பங்குனி உத்திர திருவிழாக்கள்

    பல கோவில்களில் தேரோட்டம், பூமாலை அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பழனி, திருமலை திருப்பதி, மதுரை மீனாட்சி கோவில் உள்ளிட்ட ஆலயங்கள் முக்கியமானவை.

    திருமணக் கதைகள்

    முருகன் – தெய்வானை திருமணம்

    புராணப்படி, முருகன் தெய்வானையை பங்குனி உத்திரத்தன்று மணந்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருச்செங்கோடு, பழனி போன்ற முருகன் கோவில்களில் விழா கொண்டாடப்படுகிறது.

    ராமர் மற்றும் சீதையின் திருமணம்

    இராமாயணத்தின்படி, ராமர் – சீதையின் திருமணம் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

    சிவன் – பார்வதி திருமணம்

    சிவபெருமான் பார்வதியை மணந்த நாளாகவும் இது கருதப்படுகிறது.

    சாஸ்தா / குலதெய்வ வழிபாடு

    தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும்.  குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குல தெய்வம் மற்றும் குல சாஸ்தா இருக்கும். சில குடும்பத்தில் சாஸ்தா மற்றும் குலதெய்வம் ஒன்றாக இருக்கும், சில குடும்பத்தில் குல தெய்வம் என்பது தனியாகவும், குல சாஸ்தா என்பது தனியாகவும்  இருக்கும். 

    ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சாஸ்தா கோவிலான கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டுள்ளார்கள்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூருக்குத் தென்மேற்கே காயாமொழி அருகில் குதிரைமொழி கிராமம் தேரிக் குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இந்த கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. திருச்செந்தூருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், திருச்செந்தூருக்கு வரும் ஏராளமான மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அருச்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், புலுடையார் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா மற்றும் நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்கசாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில், தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கைக்கொண்டார்சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூசண பெருமாள் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Hot this week

    பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

    தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

    தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

    ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

    பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

    அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

    அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

    Topics

    பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

    தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

    தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

    ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

    பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

    அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

    அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

    பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

    பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

    வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

    நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

    முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

    அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

    Entertainment News

    Popular Categories